Sunday, June 12, 2011

மரம்

உனது பாடுகளையோ
ஆறாத ரணங்களையோ
அவ்வப்போது
இலைகள் திறந்து காட்டுகிறாய்?

தாங்கொணாத வேதனையானதெப்படி
நமது வாழ்வு?

இக் கடுங் கோடையில்
தளிர்த்துப் பொங்கி
பூத்துக் குலுங்கி
ஒரு புது மென்காற்றையும்
எனை நோக்கி வீசும்
உனது காதல் மட்டும் இல்லையெனில்
என்னாவேன் நான், என் தெய்வமே!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP