Thursday, June 23, 2011

காட்டையழித்து

காட்டையழித்து
ஒரு கரும்புத் தோட்டம்.

ஆயிரங்கால் மண்டபத்தையழித்து
ஒரு அருங்காட்சியகம்.

பெண்ணை அழித்து
ஒரு மனைவி, மகள், மருமகள்.
மனிதனை அழித்து
ஒரு கடவுள், சாமியார், தலைவன்,
தொண்டன், ஏழை.

என்றாலும்
ஆடிக்கொண்டிருக்கும்
ஒவ்வொன்றிற்குப் பின்னாலும்
அழியாதே மறைந்தபடி
அசையாது நிற்கின்றன
அழிக்கப்பட்ட ஒவ்வொன்றும்!

உயிரின் கனல் தீண்டி
உயிர்த்தெழுந்து மணம் வீச!

எக் கணமும் தயார் நிலையில்
இருக்கும் பெருநிலையை
எண்ணி எண்ணி வியந்ததும்போய்
எண்ணியதே ஆனபடி!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP