Monday, February 5, 2024

வெள்ளிமலை...

வெள்ளிமலை உச்சியிலிருந்து
குட்டிச் சிறுமியாய்
குதித்திறங்கி ஓடிக்கொண்டிருந்த வண்டியில்
நாட்டிய சுந்தரி கிருபா லட்சுமி.

வழியெங்கும் கொஞ்சம் கொஞ்சம்
இலைகளுதிர்ந்து கிளைகளுடன் நிற்கும்
மரங்களெல்லாம்
“என் சதங்கைக்குப் பதில் சொல்லடி” என்றபடி
அப்பப்பா,
எத்தனை எத்தனை அபிநயங்களுடன்!

என் செல்லமே, இனி நமக்கு இந்த
இயற்கையுடன்தான் போட்டி
பாவப்பட்ட இந்த மனிதர்களுடன் அல்ல.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP