Wednesday, July 17, 2024

புல்லின் குரல்

அழுது அழுது அரற்றிய
அவன் கண்ணீரில் நனைந்திருந்தது பூமி
புயலாய் முளைத்தெழுந்தது
ஒரு புல்லின்
குரல்:
”கடவுளின் ராஜ்ஜியத்தை
அடையவே முடியாது
நாம் எல்லோரும்
தாய்/தந்தையாகவும் குழந்தைகளாகவும்
மாறாத வரை!”

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP