Wednesday, November 12, 2025

மெய்ச்செயல்கள் பிறக்கும் ...

மெய்ச்செயல்கள் பிறக்கும்
புதையலையும் அதன் இடத்தையும்
அவன் அவர்களுக்கு -
கூச்சலிலும் குழப்பங்களிலும்
புலம்பல்களிலும் மாட்டிக்கொண்டிருக்கும்
அவர்களுக்கு எப்படிக் காட்டப்போகிறான் ?

வாய்திறந்தால்
முத்து உதிர்ந்துவிடும் என்றா
பேசாமல் நிற்கிறாய்?
(அது அப்படித்தான்
இயேசுகூட சொல்லியிருக்கிறாரே
பன்றிகள்முன் முத்துக்களை எறியாதே என்று!)

தலையில் குடம்
விழுந்துவிடும் என்றா
நிறைபானம் அலம்பிச்
சிந்திவிடும் என்றா
இப்படி ஆகிவிட்டாய்?
(உன்னால் கண்டுபிடிக்க
இயலவில்லையா அன்பா?)

நீ கல்யாணம் செய்திருக்கக்கூடாது
எங்காவது சாமியாராகப் போயிருக்கலாம்தானே?
(எல்லோரும் சாமியாராகாதவரை
மீட்சி இல்லை அன்பா! மேலும்
பிரச்னைகள் திருமணங்களில் அல்ல

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP