Monday, December 18, 2023

எழுதி முடிக்கப் பட்டிருந்த கவிதை

செயல்பட்ட போதிருந்ததல்ல
எழுதி முடிக்கப் பட்டிருந்த கவிதை

கவித்துவமானவைகளெல்லாம்
சடங்குகளாகவும் கோவில்களாகவும்
சிலைகளாகவும் கடவுள்களாகவும்
ஆகலாம் எனில்
மனிதனைச்
சுரணையற்றவர்களாகவும் மூடர்களாகவும்
ஆக்கும் எத்தனை ஆயிரம்
சடங்கு வகையறாக்களை நாம்
இயற்ற வேண்டியிருக்கும்?

செயல்படாத கவிதை
உயிரற்றதாய்
மக்கு மங்குனியாய் இருக்கிறது மட்டுமல்ல
எல்லாத் தீமைகளையும் விளைவிக்கிறது
அதுவே அல்லவா?

மனிதனைக் கவிதைக்கு அழைத்து நிறுத்துவது
காதல் மட்டுமே அல்லவா?

லட்டு, புட்டு என்னும் சொற்கள்
லட்டு, புட்டு ஆகாது மட்டுமன்றி
பசித்தவன் வாய்க்குள் அதனை
இதுதான் இதனை உண்ணு உண்ணு
எனத் திணிப்பதும் நம்ப வைப்பதும்தான்
எத்தனை கொடுமை, மடமை, அறமின்மை!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP