Wednesday, December 20, 2023

ஒகேனக்கல் சுற்றுலா மய்யத்தில்

பாறைகள் பொடிந்து
மணற்படுகையான காலமும்…
ஆகிக்கொண்டேயிருக்கும் காலமும்…
நெருப்பு கனிந்து (மணற்கம்பளத்தில்)
நீராகிக் குதித்தோடிக் கொண்டேயிருக்கும் காலமும்…
எத்துணை இளமையோடு! இன்பத்தோடு!

பிழைப்புத் தேடி அமர்ந்த ஏழைகளும்
உல்லாசம் தேடி உலவும் செல்வர்களும்
ஒரு கணம், ஒரோர் கணம்
ஒரு சேர்ந்து கண்டடைந்துவிடத்தானே செய்கிறார்கள்,
எளிமையின் பேரனுபவத்தை? வானரசை?

இங்கே குப்பைகள் குவியாது
தூய்மைகாக்கத் தெரிந்து கொண்டோமானால்
படைத்து விடலாம் தானே
கவிதை உலாவும் கடவுளின் ராஜ்ஜியத்தை?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP