ட்ரெட்மில் சோதனை
இருந்த இடத்தில் இருந்தபடியே
ட்ரெட்மில்லில் ஓடவிட்டு
அவன் இதயத்தைப் பரிசீலிக்கிறார்
டாக்டர்.
நடைக்கும் அப்பாலுள்ள
சொற்சமாச்சாரங்கள் எதுவுமே
காரியத்திற்கு உதவவில்லை மற்றும்
ஆபத்துகளின் ஊற்றாயிருப்பதும் என்பதுதானே
நாம் கண்டதும் காணாததுமான உண்மை?