Tuesday, May 24, 2011

கண்ணீரில் கரைந்துவிட்டன

கண்ணைக் கசக்கிக் கொண்டு நிற்கும்
அக்காவிற்கு
ஒரு கவிஞன் தான்பாலாயக்கு
என்றாள் தங்கச்சிக்காரி.

மழைக் காலக் கோலம்போல்
கண்ணீரில் கரைந்துவிட்டன,
இப் பூமியின் இயற்கை எழிலை மோகித்து
ஆளரவமற்ற வனாந்தரத்து ஏரியருகே
முழுநிலாவினின்று இறங்கும்
படிக்கட்டுகள் வழியாய்
ஒரு காதல் இணை வந்து
இளைப்பாறிச் செல்லும் கற்பனைகள்.

இந்த முழு நிலா நாளில்
நம் துயரங்கள் தெளிவாகிவிட்டன.
அத்துடன் வழிகளும்.
இனி நடை ஒன்றுதான் பாக்கி.
இப் புவியின் இயற்கை எழிலை மோகித்து
நாமிங்கே இளைப்பாறி இன்புற.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP