இசை தொடங்கிவிட்டான்
இதோ கவிதையின் தெய்வம்
தன் மகனுக்கு இசையைக் கற்பித்துவிட்டார்!
இசை தொடங்கிவிட்டான்!
அனைத்து மனிதர்களும் இசைஞர்களாய்க் கூடி
தொடங்கிவிட்டது காண்
ஓர் ஒத்திசைப் பிரம்மாண்டம்! பேரொளி!
கவிதையின் மதம் உலாவும்
கடவுளின் ராஜ்ஜியம்