யசோதரை சுட்ட தோசை
நான் இருக்கிறேன்
ஒரு பெயர்ச்சொல், ஒரு வினைச்சொல் என்று
மொத்த சொற்களையும்
இரண்டே சொற்களாக்கிவிட்டோம்.
நான் எனும் இந்த உடல்
உழைக்கிறது
தன்னைக் காத்துக்கொள்வதற்கு!
இருப்பதற்கு!
இந்த உலகத் துயரையும்
காரணத்தையும்
நான் என்பதே அது என்பதையும்
அது கண்டுகொண்டது.
மூட்டிக் கனலவைத்த கரிய கல்லில்
தோசை வார்க்கத் தொடங்கினார் யசோதரை
வெந்து அழிந்தது ஒரு பக்க நுண்தளம்
திருப்பிப் போட்டவேளை மறுபக்கத்திலும்...
நடுவிலுள்ள பதமான தோசையையும்தான்
உண்ணுவதற்கு உகந்த எத்துணை
அற்புதமான உணவாக்கியிருந்தார் அவர்!