மெய்வழிச்சாலை
பெருங்களியிலிருந்தோ
பெருந்துயரிலிருந்தோ
பிறப்பதற்கு முன்னால்
மோனக் கருவறையிலிருந்தது
கவிதை
பிறந்த உடன் அதுபடும் துக்கம்
நமக்கானது
இன்பமோ உயிரின் இயல்பானது
இயல்பும் துக்கமும் கொண்டு
அது சுட்டும் பாதைதான்
அது படைத்துவிட்ட மெய்வழிச்சாலை.