சூரியன் படைத்த உலகு
காகிதத்தில் எழுத அமரும்போதே
அதன் நிழலும் உடன்வந்தே
அமர்ந்து கொள்கிறது.
நிழலையும் சேர்த்தே
அவன் எழுதிக்கொண்டிருப்பதை
அவன் அறியும்போது
அலறி ஓடுகிறது நிழல்
பென்சிலா,
ஒளி அல்லவா
இப்போது எழுதிக் கொண்டிருக்கிறது,
சூரியன் படைக்கும் உலகாய்!