பிற வாகனங்களும் மக்களும் ...
குளிரூட்டப்பட்டு
அடைக்கப்பட்டு
ஊர்ந்து செல்லும்
வண்டிக்கு வெளியே
பிற வாகனங்களும் மக்களும்
சன்னலைத் திறந்தோ, கதவைத் திறந்தோ
பார்த்தாலே
கதறிவிடும் குரலினை அடக்கியவர்களாய்
கைவிடப்பட்ட
துயர்க்கனலுடனே செல்லுவதேன்?