இந்த இடத்திற்கு...
இந்த இடத்திற்கு அவன்
விரும்பி வரவில்லை
விரும்பாமலும் இல்லை
அவன் பார்க்கும்போது
நடக்கும் செயலையும்
நடக்கப்போகும் செயலையும்
பார்க்க அல்லவா வந்திருக்கிறான்?
இங்கே யாவருக்குமாய் எழும்
பரிவும் அதன் பான்மையும்
யாரோடும் எதனோடும்
சம்பந்தப்படாததால் அல்லவா
மகத்தானதாயும் பேரன்பாயும் உள்ளது?