பூங்கொடி IAS
ஞாயிறு விடுமுறையில்
பூங்கொடி IAS
தனது பங்களாவின்
உபவனச் சோலையில்
நேர்கொண்டு நிமிர்ந்த முகமும்
ஆன்றமைந்திருக்க,
நிலம்தொட நெருங்கிய
நீள்நெடுங்கருங்கூந்தலை
நேர்த்தியுடன் விரித்தபடி செல்லும்
நடைஉலா கண்டு
பறவைகளின் தெய்வமோ என
வாய்பிளந்து நின்றன காண்,
ஆங்குள்ள மயில்கள் எல்லாம்!