Wednesday, February 4, 2026

இதழ் வண்ணம்

சாப்பிடும்போது அவர்
தன் இதழ்களில் சூடியிருந்த
வண்ணத்தையும் சாப்பிட்டுவிட்டாரா, என்ன?

கைப்பை திறந்து எடுத்து
அதனை மீண்டும் சூடிக்கொண்டார்
மனிதர்களைப் போலின்றி
தன் வாழ்வினை நன்கறிந்த
உண்ணும் உணவோடு போலவே
பார்க்கும் விழிகளோடும்
கேட்கும் செவிகளோடும்
தழுவும் காற்றோடும்
உயிர்க்கும் மூச்சோடும்
உட்சென்று செரித்து மறைந்துவிடும்
வண்ணத்தை!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP