Wednesday, February 11, 2026

ஆண்களும் பெண்களும் …

ஆண்களும் பெண்களும் காதலும் காதல் தோல்வியிலுமாய் எவ்வளவு இன்பம் அவ்வளவு வலியுடனுமாய் வாழும் வாழ்க்கை நாம் அறிந்ததுதானே?

ஆண் என்றும் பெண் என்றும் உள்ள இந்த இருபால்மையினால்தானே மனிதன் இயற்கையோடும், சக மனிதனோடும் கொள்ளும் உறவை இழந்து போரும் துயருமான உவகைப் படைத்துவிட்டான்?

குடும்பம் என்றும் சமூகம் என்றும் கடவுள் என்றும் பெரியவன் என்றும் அடிமை என்றும் மேலாண்மை என்றெல்லாம் வளர்ந்து ... இருமையும் அதற்கு எதிரான ஒருமையும்கொண்ட உலகைப் படைத்துவிட்டான்?

இயற்கையின்முன் இயற்கையை மறைத்துக்கொண்டு நின்றபடி இணையாகவும் தனியாகவும் மனிதர்கள் சுயப்படம் எடுத்துக் கொள்வதை நீங்களும்தானே பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்?

அன்னை இயற்கையே, இதற்கு பதில் சொல்லுங்கள்!

உங்கள் இயற்கையில்மட்டும் நீங்கள் பாதுகாக்கத் தொடங்கியுள்ள ஓரவஞ்சனை ஏன்?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP