Friday, February 6, 2026

கடற்கரையில்…

என்ன கெடுபேறு! யார் செய்தது இது?
எதைக் காண வந்தார்களோ
அந்தக் கடலை மூடிவிட்டது,
அவர்கள் சந்திப்பு!

என்றாலும் தனிப்பெருங்கருணையால்
அவர்கள் எந்த இடத்தில் சென்றமர்ந்தாலும்
அடங்காத காதலுடன், தனது வானத்துடன்
அவர்கள் அருகேதானே வந்தமர்ந்து கொண்டிருந்தது
கடல்!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP