பேரியற்கை எதிரொலிக்கும்
பேரியற்கை எதிரொலிக்கும்
பாதையில் நடப்போன் மாத்ரமே
போய்ச் சேருமிடமன்றோ அது!
அங்கே விளைந்துவிடும்
தனிமையினை ஆற்றுதற்கு
இயற்கையன்றி மனித உறவு
இல்லாமற் போய்விடுமோ?
உள்ளம் துள்ளும் களிநடனம்
தன் சம மக்களோடுதானே
அது சாத்தியம்?
தன் போல் ஒரு மனிதனையும் காணாத
தனியனுக் கில்லையாமோ மனித உறவின்பம்?
அவன் பரிதவிப்பைக் கண்டிரங்கியோ
மனிதர்களைப் படைக்கத்
துடித்துக்கொண்டிருக்கிறது
பேரியற்கை