ஏமாற்றம்
அப்படியானால்
உணரப்பட வேண்டியதை யெல்லாம்
உணர்ந்ததாலில்லையா,
ஒளியிலும் காற்றிலும் மகிழ்ந்தபடி
உயிர்வாழ்தலிலேயே இன்பம் காண்பதே
வழி என்றுணர்ந்தாலில்லையா,
வேட்டை வாழ்க்கையினைத்
தன் வாரிசுகளுக்குக் கைமாற்றிவிட்டு
உடல் தளர்ந்து ஓய்ந்த வாழ்வில்
வேறு வழியில்லை என்றுதானா,
அந்த மலர்த் தாவரம் –
அது சற்றே ஏமாந்து சோரும்படி
அதன் முன் வந்து நின்றார் அவர்?