மேலேயிருந்து பெய்யும் நீர்
பாட்டிலில்(பாத்திரத்தில், குடத்தில்)-  
மேலேயிருந்து
பெய்துகொண்டிருந்த நீருக்குத்தான்
எத்துணை பெரிய 
கொண்டாட்டம்! குதூகலம்!
கூடக் கூடப் பெருங்களி!
நெருங்கி நிறையப் போவதையும்
பிரியப் போவதையும் உணர்ந்தபடிதான்
எத்துணை இன்பத் துயரோலம்!