Thursday, February 14, 2013

சொற்களின் நர்த்தனம்

யாருமிலா ஒன்றின் மொழிபெயர்ப்பாளன் நான் எனில்
என் வலிகளின் ஆனந்தங்களின் பொருள் என்ன?
என் இதயத்தின் மேல் அந்த யாருமிலா ஒன்றின் சொற்கள்
ஆடும் நர்த்தனமோ?
இப்படித்தானோ
என் வலிகளையும் ஆனந்தங்களையும்
கூறும் என் சொற்களும்
அந்த யாருமிலா ஒன்றின் உரையை
நான் மொழிபெயர்த்ததாய் எண்ணும் என் சொற்களும்
ஒன்றேயாகின?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP