Wednesday, November 29, 2023

கவிதைத் தொகுப்பு - 82, துயர்மலி உலகின் பெருவலி (காவியம்) - 2023

புத்தகத்தைப் பெற கவிஞர் தேவதேவன் அவர்களை +91 9894154859 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.


கூலித்தொழிலாளிகள் *

வானத்தையும் பூமியையும்
கூரையும் தரையுமாய்
அளாவிக் களிக்கிறார்கள்,
தங்குமிடமில்லா கூலிக்குடும்பங்கள்
வீடுகளை, சாலைகளை, கட்டடங்களைக்
கட்டும் பணி இடைவேளைகளில்!

எல்லோரும் இவர்களாக முயற்சித்தால்தான்
நாம் கட்ட இயலும்
கடவுளின் ராஜ்ஜியத்தை என்கிறான் கவிஞன்.

 சொல்லவும் வேண்டுமோ
 நம் முழு ஆற்றலையும்
வேறெங்கெங்கோ அல்லவா
விரயமாக்கிக் கொண்டிருக்கிறோம், நாம்!


* இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள ஒரு கவிதை

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP