Tuesday, November 21, 2023

தராசுமுள்நுனிக்கூர்மய்யம்

“இனி ஒரு விதி செய்வோம்!”
“எந்த ஒன்றையும் இனி
செய்யாமலிருப்போம்!” என
அங்குமிங்குமாய் மாறி மாறி
அமைதியின்றி அலைந்து கொண்டிருந்தது
தராசுமுள்நுனிக்கூர்மய்யம்.
நிகழவேண்டியதைச் சுட்டிக் கொண்டும்
தானாகவே செயல்பட்டுக் கொண்டும்
கொந்தளிக்கும் பேரெழுச்சியுடனே இருந்தது
அது தன் மய்யத்தைத் தொடும் போதெல்லாம்!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP