Friday, December 7, 2012

ஒளிவேளை

எப்போதும் என் கதவோரம்
அது காத்துக்கொண்டிருக்கிறது.
ஜன்னல் வழியாய்
இமையாத பார்வை.
அறைச் சுவர்களில் ஒளிந்திருக்கிறது
என்னை அழைத்துச் செல்ல விரும்பும்
அதன் வாகனம்.
எழுந்துகொள்ள ஒரு தடையும் சொல்லாத
பிரியமும் அருளுமாய்
எனது அறை இருக்கைகள்

பறவையின் குரல்கள் வெளியே அழைக்கின்றன

ஆ! இனி என்னால் ஒரு வரியும் எழுத இயலாது
”இந்த ஒளிவேளையில்
உலகமெல்லாம் புன்னகை புரிகிறது”
என்பதைத் தவிர

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP