Thursday, August 1, 2013

கிழியாத வானிற்கப்பால்

நிற்கிறது மழைக்கூட்டம்
கிழித்தெரியும் கரங்களும் நகங்களும்
மலைகளும் மரங்களும்
நின்றுபோயின கிட்டாத தூரத்தில் அழுதபடி

அழுத்தம் தாளாது பறவைகளும் மடங்கித் திரும்பின
தாகத்தால் வெடித்த பூமிக்கு
கண்ணீர்த்துளிகள் போதவில்லை
தானாக வானைக் கிழித்துப் பெய்யும் வழக்கமுமில்லை
மழைக் கூட்டத்திற்கு
மழை வேண்டுமெனில் இருப்பது ஒரே வழிதான்
பூமியின் ஆகர்ஷ்ணப் பெண்மைக்குள் சிக்காது
உன்னை நீயே பூட்டி அம்பாகப் பாய்ந்து கிழி வானை
ஒரு பொட்டு கிழித்துவிடு போதும்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP