Saturday, August 10, 2013

புயல் குருவிகள்

1.
வீதியைத் தாண்டித்தான் வெளியே வரவேண்டியுள்ளது
உள்ளே புக வேண்டுமானாலும் வீதியைத் தாண்டித்தான்

வெளிக்காற்றுக்காய் ஜன்னலைத் திறந்தால்
வேலையின்றிக் கறுத்த அவன் முகம்

காற்றைக் கோபப்படுத்துகிறது
ஜன்னல் மூடிய அறையுள் விசிறி

வெளியிலிருந்து வரும் காற்று
எவ்வாறு உலவுகிறது
வீதியில்?

காபி ப்ரேக்கில் வீதிக்கு வந்தவன்
கண்டான், காபி சாப்பிட அழைத்தான்

வேலை கிடைத்தவன் – வேலை கிடைக்காதவன்
இருவர் காபியிலும்
பருகி முடியும் வரை
ஒரே ருசி ஒரே சூடு

2.
தோழ,
தன் போக்கில் பூப்பெய்தியுள்ளவை நமது சுவாசகோசங்கள்.
தோழமைப் புணர்ச்சியில் புயல் கருக்கொள்கிறது.
ஆபிஸ் கட்டடம், மரக்கிளை எங்கும்
புயலை அடைகாக்கிறது குருவி. ஆனால்
புயல் கருக்களிலிருந்து பிறப்பதோ –
தோழ, நீ எதிர்நோக்கும் புயல் அல்ல;
புயல் குருவிகள் காண்!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP