Friday, August 2, 2013

துடிப்பு

வியந்து வியந்து கண்டதெல்லாம்
ஒரே வெளியாய்
விரிந்து நின்றது கண்ணெதிரே
ஒரு மைதானத்தில்

சலிப்புற்று, காதல் குறும்பாய்
ஜனித்தன விளையாடல்கள்

விளையாட்டே வினையாயிற்று
மனவெழுச்சி மிருகமாக
விதிமுறைகள் குதிரையேற
விளையாட்டே வினையாயிற்று

நான் நீ என்று கட்சிகள் ஒரே வெளியில்
எத்தனை பிளவ, தாக்குதல், தட்டல்களையும்
அயராமல் ஏற்று அங்கிங்கெங்குமலையும்
முன்னர் வியந்து கண்ட பரம்பொருள்
தன் முழுமை உடையாத பந்து

அதில் அவரவர் வாழ்வுக்காய்
நாம் தெறிக்கும் தாக்குதல்கள்தான்
நம் ஒவ்வோர் இதயத்திலும்
நான் நான் என்று துடிக்குது

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP