Friday, August 2, 2013

செடி

அறியாது
ஒரு சிறு செடியை மண்ணிலிருந்து பிடுங்கிவிட்டேன்
திசைகள் அதிரும் தனது பெருங்குரலால்
அது மரமாகிவிட்டது என் கையில்
அந்தரவெளியில் துடிதுடித்து
ஆதரவுக்குத் துழாவின அதன் வேர்கள்
பாய்ந்து போய் அதனை அணைத்துக் கொண்டது பூமி
கொலைக் கரத்தின் பிடிதகர்த்து
மேல்நோக்கிப் பாய்ந்தது புது ரத்தம்
கழுத்தில்பட்ட தழும்புடனே
பாடின தலைகள்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP