Monday, August 12, 2013

மழைத் துளிகள்

இலைகளிற் தொங்கியபடி
யோசித்துக்கொண்டிருக்கும் மழைத்துளிகளே!

யோசனைகளாற் பயனென்ன?

கனம் கொண்டீரேல்
மண்ணின் தாகம் தீர்க்கிறீர்
இல்லையெனில்
கதிரவன் கொய்து உண்ணும்
கனிகளாகிறீர்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP