Sunday, August 18, 2013

இருண்ட கானகத்தினூடே

1.
ஒருவன் செல்லுமிடமெல்லாம்
கருணை கொண்டு வழிகாட்டியவாறு
ஒரு ஒளியும் செல்வதெங்ஙனம்?
ஒளிரும் விளக்கொன்று
அவன் கையோடு இருக்கிறது

2.
முன்செல்வோனின் பாதம்பட்டு
முட்களற்று பூத்த பூமியே!
வியந்து பின்தொடர்ந்து
பின் தொடர்வோரின்
சுக பாதையான பூமியே!
நீ, பின்தொடர்வோனை வெறுத்தென்ன
தன்னை உணராமல்!

தன்னை உணர்ந்த பூமி
அந்த அம்மணப் பாதங்களை ஒற்றி ஒற்றி
அவனுடன் நகரும்
வெறும் பாதையாய் மீள்கிறது

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP