Saturday, August 3, 2013

சிலுவைப் பிரயாணம்

பாதத்திலொரு முள் தைத்து
முள் இல்லாப் பாதையெல்லாம்
முள்ளாய்க் குத்தும்
வழியை வலி தடுக்கும்
பெருமூச்சு விட்டு நிற்க – விடாது
உன் அகங்கரிக்கப்பட்ட முற்பகல்களெல்லாம்
உன்னைச் சாட்டையிட்டு நடத்தும்
எதிர்ப்படும் முகமெல்லாம்
வலிக்கு ஒத்தடமிடும் ஆனாலும்
நின்றுவிட முடியாது

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP