Thursday, August 15, 2013

பாய்

பாய் விரித்தேன்
படுக்குமிடம் குறுகிப் போச்சு

என்னை மீட்க வேண்டி
அகண்ட வெளி
காலத்தை அனுப்பி
அபகரிக்க முயன்றது
என் பாயை

விட மறுத்தேன்
பிய்ந்து போச்சு

புதுப்புது பாய்கள் விரித்தேன்
வாழுமிடம் குறுகியதால்
வதைக்கும் சிறையாச்சு

ஒரு கண விழிப்பு
வெளியின் அழைப்பு
பாயைத் தூர எறிந்தேன்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP