Saturday, August 24, 2013

பச்சைப் பாம்பு

பாம்பு தன் நிறத்தை மாற்றிக்கொண்டு
மரத்துடன் அது செய்துகொண்ட இணக்கம் என்ன?
ஒன்றுமேயில்லாத அன்பு

அதன் கூரிய நாக்கு
உன் கண்களைப் பார்த்தே கொத்திவிடும்;
காலத்தின் கருவளையமிட்ட உன் கண்களை
உன் கண்களைப் பாதுகாத்தபடியே
இடுக்கிவிட முடியுமா நீ அதன் தலையை?

இடுக்கியபடியே இன்னொரு கையால் காமத்துடன்
அதன் உடலைத் தழுவி உருவுகிறாய்
அந்த உடலின் உக்கிரநெளிவில்
காண்கிறாய்;
ஒரு நீண்ட நதி மற்றும்
ஒரு சவுக்கு

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP