Monday, August 5, 2013

அதர பானம்

எச்சிலென விழுந்தபின்
நக்குவதல்ல
முத்தம்

சொல்லூறும் வாய்
ஒரு கிணறு
கேட்கும் காது
வாய்விரித்த ஒரு வெற்றுவாளி
கிணற்றின் நீர்
வாளியின் வெற்றுவெளியைத் தீண்ட
வாளியின் வெறுமை
கிணற்றின் ஊற்றுநீரைத் தீண்ட
கேட்டல் – ஒரு பரிவர்த்தனை

கேட்டல்
குழாய் நீர் ஒழுக்கல்ல;
ஆனதனால்
நீர் எடுப்பதற்கு
கயிறும் வாளியும் மட்டும் போதாது
தசை நார் வலு வேண்டும்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP