Friday, August 16, 2013

ஓவியம்

அவள் அழகாயிருந்தாள்
அதன் காரணமாய்த்தான்
அவளை என் ஸ்டுடியோவுக்கு
அழைத்துச் சென்றேன்
பயந்து
சுற்றி முளைத்துள்ள
புலன் கதவுகள் வழியாய்
ஓட நினைத்தாள் அவள்
கதவுகளைச் சாத்தினேன்

அவளை உள்ளே போக்கி
மூடிய அறை
ஒரு தூரிகையாயிற்று
பயத்தில் இருண்டு
விகாரமாயிற்று அவள் அழகு

உள் விளக்கைப் போட்டு
ஒளியை அவள் மேல் பாய்ச்சி
அவள் அழகை மீட்டேன்

குவிந்து நின்ற
தூரிகையின் கதவுகள் திறந்து
திரைவெளியில் குதித்து
என்னை விட்டோடினாள் அவள்
தன் வழியைப் பார்த்துக்கொண்டு

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP