Tuesday, September 10, 2013

மொட்டைமாடிக் காற்றும் புத்தகமும்

குண்டடி பட்டதாய்
இறக்கையடித்துத் துடிக்கிறது
மொட்டைமாடிக் காற்றில், மறந்து
நான் தரையில் விட்ட புத்தகம்;
படிக்கையில் வானில் தடம் பதிக்காது
பறந்துசெல்லும் பறவை அது
குனிந்து எடுத்தேன்
ஒரு குழந்தையைத் தூக்குவதுபோல் –
ஆவியோடணைத்து முத்தமிட்டேன்

என்னை மறக்கச் செய்யும் காற்று
உன் சிறகுகளை ஒடிக்குமா?
ஒடிக்காது.
’என்னைப் படி’ என்று
உன்னை இறைஞ்ச வைக்கிறதோ காற்று?
நான் துடித்து, உன்னைக்
கையிலெடுத்து முத்தமிடுகையில் – நீ
அமைதி கொள்வதன் அர்த்தமென்ன?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP