Thursday, September 26, 2013

கீரைப்பாத்தி நடுவே ஒரு ரோஜா

யூனியன் போராட்டம், சினிமா விளம்பரம்,
ஃபேமிலி எய்டு போன்ற
எல்லா நோட்டீஸ் தாள்களிலும் கிடைக்கிற
வெற்றிடங்களை
கவிதை எழுதப் பயன்படுத்துகிறேன்
கீரைப் பாத்தி நடுவே
ரோஜாவும் வைத்திருக்கிறேன்

வேலியற்ற என் வீட்டுக் கீரைப்பாத்திகளை
அண்டைவீட்டு விலங்குகள் மேய்ந்துவிடுகின்றன
(வேலியிடப் போகிறேன் அதற்கு)
விலங்குகளையும் முந்திக் கொண்டு
என் ரோஜாவைத் திருடுவது மட்டும்
யார் என்று அறிகிலேன்!

கொடுப்பதற்கு மறுக்காத என்னிடம்
தன்முகம் மறைத்துக் கொள்ளவோ திருட்டு?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP