Friday, September 13, 2013

வறட்சி

1.
நெருப்பென விரிந்த இந்த வெயிலில்
பறிக்காத ஒரு தாமரை மலர்போல்
நீ காணுவதெங்ஙனம்?
எந்தவொரு ஊற்றில்
வேர்கொண்டுள்ளது நின் உயிர்?

2.
விழிகளில் நீர்;
கைகளில் வெற்றுக்குடம்.
வெற்றுக்குடம்
கனக்கிறது

3.
தவியாய்த் தவிக்கிறது,
தண்ணீர்ப்பானையைச் சுற்றி வெயில்
கைகளில்லாத மண்பானை
கசிகிறது
கைகளில்லாத வெயில்
நக்குகிறது

4.
நெருப்புக் கால்தடங்கள் கேட்டதும்
நடுங்குகின்றன – மண்ணுள் பதுங்கிய
வேர் பெற்றிராத வித்துக்கள்
ஆழ வேர் பெற்றுள்ளவை
வெயிலை எதிர்த்து வெல்கின்றன
நீர் கேட்டுத் தவிக்கும் மண்ணுக்கு
நிழலைக் கொட்டுகின்றன, மரங்கள்

6.
மரங்கள்!
ஆ! மரங்களல்லவா கோடையை
வசந்தமாய் மாற்றுகின்றன!
கோடைவெயிற் கொடுமையை
நீ எப்படி வெல்கிறாய்?
மரத்த தோலும் பழுதுற்ற நின் பார்வையும்
வசந்தத்தை எதிர்க்கும் கவசங்களாயினவோ?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP