Saturday, September 28, 2013

காமம்

உன்னைக் கண்ட முகூர்த்தமே
என்னை உன்னில் இழந்தேனோ?

இழந்த என் ஜீவனைத்தான்
உன் இதழில் என் இதழ் பொருத்தி
மீட்க முயல்கின்றேனோ?

மீண்ட என் ஜீவனோ – ’அநியாயமாய்’ –
என்னையே எரிக்க
என்னை
உன்னிலே வடித்துவிட்டு

சதா
கட்டை போலிருக்கவே முயல்கின்றேனோ?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP