Sunday, September 8, 2013

பக்ஷி ஜோஸ்யம்

’இத்தனை அழகான கவிதைகளை
எப்படி எழுதுகிறாய் நண்பா?’

சும்மா ஒரு பக்ஷி ஜோஸ்யம்தான்
இதிலே, உன் பெயருக்கு, அவன் பெயருக்கு
ஊர் பெயருக்கு என்பதெல்லாம்
ஒரு சாக்குதான்.
உண்மையில் என் கிளி
ஒன்றும் அறியாதது
பச்சைக் குழந்தைமாதிரி.
ஒரு சீட்டெடுத்துத் தரும்.
தன் உயிரை ஈர்த்ததையெல்லாம்
வரைந்துவைத்த சீட்டுக்களினின்று ஒன்று.
அதுக்குத் தக
சேகரித்து வைத்த குறிப்புகளைப் புரட்டிக்
கரைவிடுவேன். அவ்வளவுதான்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP