Sunday, September 8, 2013

கைக்கோல்கள்

கால்கள் நொய்ந்தாலும்
கைகள் இருக்கின்றன
கைகள் நொய்ந்தாலும்
வயிறு இருக்கிறது

கால்கள் நொய்ந்தன என
கழிகளைப் பற்றுவோனே!
கால்கள் நொய்ந்தனவோ
கழிகள் கொண்டு ஒருவரை ஒருவர்
தாக்கிக் கொல்கையில்?

கழியைப் பற்றாதே!
பற்றுவோனைப் பற்றிக் கொல்ல
கழியில் இருக்கிறது, நாகம்!

கண்மூடிக் கும்பிட்டுக் கொண்டிருக்கையில்
கடவுளர் படத்தைக்
கரையான் தின்றுகொண்டிருக்கிறது
சுயம்வரம் நடப்பதாய் ஒருவரை ஒருவர்
வாரிக்கொண்டிருக்கும் மேடையில்
அத்தனை பேருக்குமாய்
அத்தனை எண்ணிக்கையில்
வருகிறாள் அவள்!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP