Monday, July 1, 2013

ஒரு மழைநாளில்...

பளிச்சென்ற பாதங்கள்
கலைந்து
ஒரு இணைப்பாதம்
உயர்த்திப் பிடித்த நீலப்புடவை.
கொட்டி வெறித்த வானப் புதுமை.
பூமி நோக்கிய பார்வை.
உள்ளுணர்வாய்
பூத்த சிரி,
நதியோட்ட அழுகாக
அவள் விலகி விலகி நடந்துவர;
ஈரக் கூந்தலுடன் தலை தாழ்த்தி
இரு கரையும் நிற்கும் மரங்கள்;
விழி மூடிய தியானத்தில்
வானத்தை நெஞ்சில் இருத்தி
குண்டுகுழி நீர்கள் லயிக்க
தென்னைமரக் கிளை மீது
புளகித்துச் சிலிர்த்து மீண்டும்
மௌனமாய் அமர்ந்திருக்கும்
நன்றாய் நனைந்த காகம் ஒன்று

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP