Saturday, July 6, 2013

என்னை எடுத்துக்கொண்ட இவள்

விடாய்த்துப்
பிளந்த வாயுடன்
குழாயடியில்
குடம்
பதறிப் பதறி
ஏந்திக் குடிக்கும்

தாகந் தீர்ந்த பின்னும்
விடாது பொழிந்து
வழியும் ஜலத்தில்
தேக மெல்லாம் சிலிர்த்துத்
திணறத் திணறச்
சுகிக்கத் தொடங்கும்
பிறகு

உள்ளும் புறமுமாய்
பெருகிவிடும் வெள்ளத்தில்
அமிழ்ந்து
கைவல்யமாயிருக்கும்
அப்போது

ஒரே குறுக்கீடாயிருக்கும் ’நானு’ம்
கரைந்துகொண்டிருக்கும்
கடைசியாய்

ஒன்றேயான வெள்ளத்தில் கலந்து
மறைந்து போயிருக்கும்
ஆனால் இவளோ

நான் சுகிக்கத் தொடங்கியதுதான் தாமதம்
தூக்கிக்கொண்டு போய்விட்டாளே
வாக்குறுதிகள் அளித்தபடி

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP