Monday, July 8, 2013

இருவர்

தோட்டத்துக்கு நீர் பாய்ச்சத்
தோதான நிலா வெளிச்சம்.
தன் தோட்டக்
கிணற்றுக்குள் தெரிந்த நிலவின்மேல்
மோகத்தால் விழுந்து விட்டான்

தோட்டத்தையே அறவே மறந்துவிட்டான்

ஒரே நினைவாய்
அந் நிலவைத்தான் பிடிக்க எண்ணி
முயன்று முயன்று முயன்று
ஏற்றம் இரைக்கும் கையுடனே
மூச்சு வாங்க இளைத்து நின்றான்

மண்வெட்டிக் கையோடு
நீர் விலகி முடித்த மச்சினன்
சிரித்து நின்றான் இவனைப் பார்த்து
நீர் குளுரப் பாய்ந்த தோட்டமென

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP