Saturday, July 20, 2013

எனது பத்தினி

யாரது
தேம்புவது

ஏன்

காலமெல்லாம்
குலவிக் கலவிப் – பின்
பிரிந்து அழும் பொழுதெல்லாம்
கவி எழுதத் துணை நின்றருளிய
என் பத்தினி!

ஏன்

இன்று நான்
என் கவிதைகளை யெல்லாம்
அள்ளிக் கட்டிக்கொண்டு
எரியும் காமத்துடன்
காலமெனும் விலைமகளின்
கதவைப் போய்த் தட்டிக்கொண்டிருக்க...
ஆ! தேம்புகிறாளே
இக் கணமெனும்
என் பத்தினி!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP