Tuesday, July 23, 2013

தரிசனம்

செடி ஒன்று காற்றில்
உன் முகப்பரப்பிற்குள்ளேயே அசைகிறது
கோணங்கள் எத்தனை மாற்றியும்
இங்கிருந்து உன் முகம் காண முடியவில்லை
இவ்விடம் விட்டும் என்னால் பெயர ஆகாது
ஆனால் காற்று உரத்து வீசுகையில்
செடி விலகி உன் முகம் காண முடிகிறது

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP