Friday, July 5, 2013

இரட்டைக் குடம் ஏந்தி வருகிறவள்

இது,
தாகம் எரிகிற
அத்துவான வெயில்
கிளைக்க மறந்து
நெட்டென நின்றுவிட்ட
பனைகள் வழியே
என் தாக விழிகளுக்கு
’அவள்’
தண்ணீர் சுமந்து வருகிற கோலம்

ஒரு குடம் தலையில்
பிடித்தரமில்லாமல் நிராதரவாக;
ஆனால் அதுதான் கவனமாக.
ஒரு குடம்
’ஆசபாசமாய்’ ஒசிந்த இடையில்
வளைக் கரத்தின் அரவணைப்பில்
ரொம்பச் செல்லமாக;
ஆனால் அலட்சியமாக.
என்றாலும்
சமன் காத்து இயங்குகிற
நடை;
அதற்கு
இசைவாய் அசையும்
மற்றுள்ள கை – ஆ! அதுதான்
எத்தனை அனுசரணையோடும் விழிப்போடும்!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP