Friday, July 5, 2013

முத்தமிடும் போது...

மூண்டு வரும் சிரிப்பாணி
விழிகளிலும் தெறிக்க
அழகு உதடு
அழுத்தும் பற்களால்
அநியாயமாய்ப் பிரிந்து காணும்
வாழ்வும் சாவுமாய்!


அன்று காலை
குளிக்கிறதுக்குப் போகும் வழியில்
ஆலமரத்தில் அவள்
பல் துலக்கக் குச்சி ஒடிக்கும் சப்தம்
என் பறவைகளெல்லாம் பதறிச் சிதற

முகம் கழுவ நீர் கேட்டாள்
நான் குளித்துக்கொண்டிருக்கையில் வந்து
தென்னை மரம் நிற்கும் இடத்தில்.
ஒரு கணமே
காண முடிந்த பற்களை அவள்
வெடுக்கென மறைத்துக்கொண்டாள்,
முகத்தில் அதே சிரிப்பாணி
விழிகளிலும் தெறிக்க
அழகு உதட்டின்
அநியாயமாய்ப் பிரிந்து காணும்
வாழ்வும் சாவுமாய்

தென்னைகள் பூவாய் முழிக்கும்
கிணற்றிலே குளித்தெழுந்து
பச்சைக் குழல் ஒதுக்கிப்
பார்க்கும் ஒளி முகமும்,
வேணா வெயில் எரித்தும்
கருகாத மலர்போல உருவும்,
மேலாக்கு விலகி விலகி
வேட்கை போல் குலைத்த முலையும்...

ஏந்தி... அவள் எதிரே நிற்க
பிடிக்குள் சிக்கி...
முத்தக் கிணற்றில் வாளி இறங்கி
’அது’ சித்திக்கும் சமயம்;
தள்ளியே போயினள்
தான் தந்த கணப்பு மாத்ரம்
எப்போதும் என்னை எரிக்க

இருள் சூழுமிவ் அந்திப் போதிலும்
அவள் அதே சிரிப்பாணியும்
அழகும் உதட்டின்
அநியாயமாய்ப் பிரிந்து காணும்
வாழ்வும் சாவுமாய்!

அன்று துயில் விட்டெழுந்தபோது
தாவி ஒரு குச்சி ஒடித்தேன் வேம்பில்
என் பல் துலக்க

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP